Posts

Showing posts from June, 2011

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில் - 3

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... ஓவ்வொருவராக பேச ஆரம்பித்தோம்.வார்த்தைகளை வாடைக்காற்றுடன் பரக்கவிட்டோம். பணியிடங்கள், தங்கும் இடங்கள் பற்றிய அனுபவத்தை அள்ளிவிசினோம். நெடுநாள் சந்திக்காமல் சரிந்துக் கிடந்த நினைவுகள் சில நேரங்களில் சங்கமிக்கத் தொடங்கின. மழைமேகத்தில் தோகைவிரித்து கொண்டாடும் மயில் கூட்டம் போல் எங்களின் காலை பொழுது நிகழ்வுகள் கடந்தன. முதிய உணவு அடுத்த அறையில். ஆறை கண்காணிப்பாளர்கள் செய்து வைத்திருந்த அந்த அலங்கார உணவு உபசரிப்புக் கூடம் எங்களை அப்படியே மடக்கிப் போட்டது. பார்வையிலே பசியை தீர்த்த பெருமை அந்த அறைக்கு இருந்தது. அற்புத ஒளி வெளிச்சத்தில், அளவான சத்தத்தில், அகலமான அறையில் அனைவரும் மதிய உணவை உண்டோம். காலம் கடந்தாலும் இப்படி ஒரு நிகழ்வு கிடைக்குமா? கண்டங்களைத் தாண்டி கடைமைகளை செய்தாலும் இந்த குயில்களின் கூட்டுக்குள் இடம் கிடைக்குமா? ஆயிரம் கணக்கில் அள்ளிப் போட்டாலும் இந்த சந்திப்புக்கு ஈடாகுமா? என்ற சந்தோசம் கண்களுக்குள் இருந்த ஈரத்தை கொஞ்சம் வெளியேக் கொண்டு வந்தன. கடல்கள் சங்கமித்து அலைகளை எழுப்பி, அலைகளின் மேலே நின்று நிலவை பிடித்து, மகுடம் சூட்டுவது போல்

Nice CSE ‘A’ Batch 2007– Get together - கால் தடங்களின் நினைவுகளில் - 2

Image
கால் தடங்களின் நினைவுகளில்...... சென்னையா? பெங்களூரா? திருவனந்தபுரமா? சந்திப்புக்கான இடம் எது? நாள் எது? எண்ணங்களை காற்றுவாக்கில் பரக்கவிட்டு காத்திருந்தோம். ஆதிகமானவர்கள் சென்னையில் இருந்ததாலும், திருவனந்தபுர நண்பர்கள் சென்னைக்கு வர சம்மதித்ததாலும், பெங்களூர் நண்பர்களை சென்னைக்கு அழைப்பது சுலபமாயிற்று. நாட்களை எண்ணினோம். விடுமுறையாகவும், அனைவருக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 28-03-2009 நாளை தேர்ந்தெடுத்தோம். சென்னையில் எங்கே வைத்து நடத்துவது எளிது? என்று தீவிர விசாரித்து சூழ்நிலையையும், நேரத்தையும், உணவையும், இடத்தையும் கருத்தில் கொண்டு இறுதியாக கோயம்பேடு மார்க்கெட்டின் அருகில் உள்ள கோட்டல் ராயல் பிளாசாவை தேர்வு செய்தோம். எனது வெகுதூர நண்பர்கள் அன்று அதிகாலையிலே எனது அறைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் நான் எதிர்பார்த்த எனக்கு உற்சாகமூட்டிய நண்பனை மட்டும் காணவில்லை. ஒரே வரிசையில் அமர்ந்து, ஒன்று போல் ஓரங்கட்டப்பட்டு, எனது கவிதை கல்லூரி மேகஸினில் வருவதற்கு உந்துதலாக இருந்த என் உள்ளுக்குள் உலாவந்த நிலாவை காணவில்லை. பல வகையிலும் என் பண்புக்கு பாத்திரமான என்னவனைக் காணவில