எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி!

எனக்கு பிடித்தவர்! மாபெரும் வழிகாட்டி!

எனக்கு பிடித்தவர்! என்னை பிடித்தவர்!

சமுதாயப் படிக்கட்டில் கால் ஊன்ற
சொல்லிக் கொடுத்தவர்....

வாழும் சூழ்நிலையில் மனிதர்களின் உணர்வை
புரிந்துக் கொள்ள வழிக்காட்டியவர்...

வாழ்வின் சுக துக்கங்களை அனுபவிக்க
என்னை அழைத்து சென்றவர்...

நவீனக் கால சூழலுக்கு ஏற்றார் போல்
என்னை அழகுபடுத்தி மகிழ்ந்தவர்...

இருண்ட நெஞ்சத்தில் புதிய வெளிச்சத்தை
ஏற்படுத்தி ஒளியூட்டியவர்...

பகைமை குணத்தை அகற்ற புதிய
பாதையைக் காட்டியவர்...

தன்னோடு உறவாட, உறையாட எனக்கும்
அனுமதி அளித்தவர்...

என் கருத்துக்கும் சிந்தனைக்கும்
அடித்தளமிட்டவர்....

சிந்தனையை சீர்துக்கி பார்க்க
தூண்டியவர்...

வாழ்க்கை பாதையை தேர்வு செய்ய
உதவிய உத்தமர்...

மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ
அவர் என் மாபெரும் வழிகாட்டி! எனக்கு பிடித்தவர்!

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)