வாழ்த்துக்கள் கூறி வரவேற்போம் புத்துலகை
புது உலகம்
வாழ்த்துக்கள் கூறி வரவேற்போம் புத்துலகை – அது
வலுவூட்டட்டும் இளைஞர்களின் தோளை.
பசுத்தோல் போர்த்திய புலிகள்
சூரியன் கண்ட பனிபோல் மறையட்டும்
ஆணவம் கொண்ட அகந்தையின் மனிதர்
ஆணிவேர் அறுந்த மரம்போல் சாயட்டும்
சாதிக்காக போர்கொடி தூக்கிய சங்கங்கள் - இனி
நீதிக்காக போர்கொடி தூக்கட்டும்
மதங்களுக்காக மாண்ட இதயங்கள் - இனி
மனிதனுக்காக வாழட்டும்
சுயநலத்தால் சுவடு இழந்த உள்ளங்கள் - இனி
பிறர் நலனில் வரலாறு படைக்கட்டும்
அடக்கு முறைகளுக்காக எழும்பிய கைகள் - இனி
ஆதறவற்றவர்களுக்காக எழும்பட்டும்
மூடநம்பிக்கையால் முகவரி இழந்த முகங்கள் - இனி
கல்வி கனையால் கண் திறக்கட்டும்
பொய்மைக்காக குரல் கொடுத்த உதடுகள் - இனி
வாய்மையை உரக்க முழங்கட்டும்
அன்பு அருவியென பாயட்டும்
பாசம் வற்றாத ஆறாகட்டும்
உறவு கடலென பொங்கட்டும்
நீதி காட்டாற்று வெள்ளம் போல் புறப்படட்டும்
நேர்மை வெள்ளி அருவியென பூக்கட்டும்
எங்கும் உண்மை, சகோதரத்துவம் நிலைத்து
உலகம் அமைதியில் திலைக்கட்டும்
சமத்துவம் தழைத்தோங்க அன்பு என்னும்
ஆயுதத்தை கையில் எடுப்போம்
புது உலகம் படைப்போம்.
வாழ்த்துக்கள் கூறி வரவேற்போம் புத்துலகை – அது
வலுவூட்டட்டும் இளைஞர்களின் தோளை.
பசுத்தோல் போர்த்திய புலிகள்
சூரியன் கண்ட பனிபோல் மறையட்டும்
ஆணவம் கொண்ட அகந்தையின் மனிதர்
ஆணிவேர் அறுந்த மரம்போல் சாயட்டும்
சாதிக்காக போர்கொடி தூக்கிய சங்கங்கள் - இனி
நீதிக்காக போர்கொடி தூக்கட்டும்
மதங்களுக்காக மாண்ட இதயங்கள் - இனி
மனிதனுக்காக வாழட்டும்
சுயநலத்தால் சுவடு இழந்த உள்ளங்கள் - இனி
பிறர் நலனில் வரலாறு படைக்கட்டும்
அடக்கு முறைகளுக்காக எழும்பிய கைகள் - இனி
ஆதறவற்றவர்களுக்காக எழும்பட்டும்
மூடநம்பிக்கையால் முகவரி இழந்த முகங்கள் - இனி
கல்வி கனையால் கண் திறக்கட்டும்
பொய்மைக்காக குரல் கொடுத்த உதடுகள் - இனி
வாய்மையை உரக்க முழங்கட்டும்
அன்பு அருவியென பாயட்டும்
பாசம் வற்றாத ஆறாகட்டும்
உறவு கடலென பொங்கட்டும்
நீதி காட்டாற்று வெள்ளம் போல் புறப்படட்டும்
நேர்மை வெள்ளி அருவியென பூக்கட்டும்
எங்கும் உண்மை, சகோதரத்துவம் நிலைத்து
உலகம் அமைதியில் திலைக்கட்டும்
சமத்துவம் தழைத்தோங்க அன்பு என்னும்
ஆயுதத்தை கையில் எடுப்போம்
புது உலகம் படைப்போம்.
புது வுலகம் நல்லா இருக்கு, கவிதை நடையும் கூட.
ReplyDelete