நண்பனின் திருமண நாள் நினைவுடன்....
நண்பனின் திருமண நாள் நினைவுடன்.... இரு மனத்திற்கும் வாழ்த்துக்கள்....... இன்று பூமியில் புதிதாய் பிறந்த பூக்களைக் கொண்டு வாழ்த்துகிறேன். வருடம் பல கடந்து வரங்கள் பல வாங்கி வாழ இந்த நண்பனின் பாசம் கலந்த வாழ்த்துக்கள்! காதல் சமுத்திரத்தை கடந்து சாதித்தவனே...வாழ்த்துக்கள்! ஜோசப் காலனிக்குள் இருந்து ஜோஸ்பினை வெற்றிக் கொண்டவனே...வாழ்த்துக்கள்! திட்டுவிளை பெற்ற தேனமுதே...வாழ்த்துக்கள்! இசை இராகம் காது மடல்களை தாழ் திறந்தது. சொந்தங்களின் சந்தோசம் காலனியை கலகலப்பாக்கியது. தலைவாழை குலை வந்தவரை வரவேற்க தலைமை தாங்கியது. சூரியனின் பக்கத்து வீட்டுகாரன் சீரியல் பல்பும் சிரித்தது. மணமக்கள் உள்ளூர் தொலைகாட்சியில் உலா வந்தனர். வாழ்த்த வருபவர்களும் வந்த வண்ணமாகவே இருந்தனர். ஆயிரம் அல்லிக்குள் இரு தாமரையாய் மணமக்களின் வாகன ஊர்வலம். ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய் தங்கமலர்களின் ஒய்யார தோரணை. புல் தரையில் காலை பனிதுளியாய் காதலர்களின் மலர்ந்த முகம். ஆலயத்திற்குள் அலங்கார அணிவகுப்பு. சுடர் ஏற்றப்பட்ட விளக்காய் இரு மனமும் ஒளிர்ந்தது. சம்மதத்துடன் திரும
//புண்ணகைக்கும் பூவே//
ReplyDeleteஇதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா நண்பா?
இணைந்து நடைபயில வாழ்த்துகள்!!